Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆணிகள் பாய்ந்த


    • ஆணிகள் பாய்ந்த கரங்களை
    • பல்லவி
    • ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
    • ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே 

    • சரணங்கள்
    • 1. பார் ! திருமேனி வாரடியேற்றவர் 
    • பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே 
    • பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
    • பயமின்றி வந்திடுவாய் --- ஆணிகள்

    • 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் 
    • நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
    • உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
    • சரண்புகுவாய் இத்தருணம் --- ஆணிகள்

    • 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
    • மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
    • உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
    • கிருபையும் அளித்திடுவார் --- ஆணிகள் 

    • 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
    • பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
    • மறுரூப நாளின் அச்சாரமதுவே
    • மகிமையும் அடைந்திடுவாய் --- ஆணிகள்

    • 5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
    • இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
    • அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
    • அவரே உன் நாயகரே --- ஆணிகள்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 2379 times