Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அல்லேலூயா!


    • அல்லேலூயா! ஆ மாந்தரே
    • 1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! 
    • ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,
    • இந்நாளில் சாவை வென்றோராம்
    • விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.
    • அல்லேலூயா!

    • 2. அஞ்ஞாயிறு அதிகாலை
    • நல் மாதர் மூவர் கல்லறை
    • சென்றாரே காண தேகத்தை.

    • 3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;
    • வெண் ஆடை தூதன் சொல்லுவான்:
    • நாதர் கலிலேயா செல்வார்.

    • 4. பயந்த சீஷர் ராவிலே
    • கண்டார் கேட்டார் தம் நாதரே!
    • என் சமாதானம், தாசரே!

    • 5. உயிர்த்த நாதர் கண்டோமே
    • என்றோரைத் தோமா கேட்டானே;
    • நம்பான், சந்தேகங்கொண்டானே.

    • 6. வா, தோமா, என் விலாவைப் பார்,
    • இதோ, என் கைகள் கால்கள் பார்;
    • நம்பு, சந்தேகம் தீர் என்பார்.

    • 7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
    • விலா, கை, கால்கள் நோக்கினன்;
    • என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

    • 8. காணாமல் நம்பின் பாக்கியர்;
    • மாறா விஸ்வாசம் வைப்பவர்
    • மா நித்திய ஜீவன் பெறுவர்.

    • 9. மா தூயதாம் இந்நாளில் நாம்
    • நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
    • பரனைப் போற்றி மகிழ்வோம்.
    • அல்லேலூயா! 

  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1009 times