Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எனக்கின்பம் ஏதெனக்


    • எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்
    • என் பாரம் நீங்கிற்றே
    • வம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால்
    • தெம்பாய் நீங்கிற்றென்பேன் 

    • பல்லவி
    • அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதே
    • அவை வானம் பூமி போல நீங்கிற்றே
    • அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே
    • ஆமென் சுத்தமானேன் 

    • 2. அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்
    • என் பாரம் நீங்கிற்றே
    • என் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான்
    • அன்றே சுகமானேன் --- அதை

    • 3. சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்
    • சீ போ நீங்கிற்றென்பேன்
    • நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்
    • நேசர் சுகம் தந்தார் --- அதை

    • 4. எப்போதும் நேசருடன் என் நாளெல்லாம்
    • அப்போதென் பாக்கியமாம்
    • தப்பாது பாட்டுப்பாடி ஜெபித்துப் போற்றுவேன்
    • ஆஹா பேரின்பமே --- அதை

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 221 times