Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தெய்வன்பின் வெள்ளமே


    • தெய்வன்பின் வெள்ளமே
    • 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
    • மெய் மனதானந்தமே! 
    • செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
    • ஐயா, நின் அடி பணிந்தேன்

    • 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
    • எந்தாய் துணிவேனோ யான்? 
    • புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
    • பொற்பதம் பிடித்துக் கொள்வேன் 

    • 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித் 
    • தேவே தவறிடினும், 
    • கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்
    • யாவும் பொறுத்த நாதா! 

    • 4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
    • மேற்கொள்ளும் நாச ஏக்கம் 
    • தாக்கித் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
    • தூக்கித் தற்காத்தருள்வாய் 

    • 5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப் 
    • பூசைப் பீடம் படைப்பேன் 
    • மோச வழிதனை முற்று மகற்றியென்
    • நேசனே நினைத் தொழுவேன் 

    • 6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
    • மகிமையோ, வருங்காலமோ, 
    • பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
    • பிரித்திடுமோ தெய்வன்பை? 

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 103 times