Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இருள் சூழும் காலம்


    • இருள் சூழும் காலம்
    • 1. இருள் சூழும் காலம் இனி வருதே
    • அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
    • திறவுண்ட வாசல் அடைபடுமுன் 
    • நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ? 

    • பல்லவி
    • திறவுண்ட வாசல் அடைபடுமுன் 
    • நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ? 
    • நாட்கள் கொடியதாய் மாறிடுதே
    • காலத்தை ஆதாயம் செய்திடுவோம் 

    • 2. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு 
    • தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
    • பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
    • அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்

    • 3. எத்தனை நாடுகள் இந்நாட்களில்
    • கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
    • திறந்த வாசல் இன்று உனக்கெதிரில் 
    • பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்

    • 4. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு 
    • அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
    • ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
    • என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

    • 5. இனி வரும் நாட்களில் நமது கடன் 
    • வெகு அதிகம் விசுவாசிகளே
    • நம்மிடை உள்ள ஐக்கியமே
    • வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே

    • 6. இயேசுவே எங்கள் உள்ளங்களை 
    • அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
    • இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
    • இயேசுவின் நாமமும் விரைந்திடுமே
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1634 times